Monday, September 5, 2011

10. இயல்பு வாழ்க்கை


10. இயல்பு வாழ்க்கை

``இயல்பான சேவை செய்வதன் மூலமாக தன்னையே அறிந்து இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு தகுதி ஆக்கிக் கொள்ளலாம்’’.

``இயல்பான சேவையில் உட்பொருளை உணர்வதால் மனம், உடல், உயிர் ஆகியவை சமநிலை அடைந்து இயல்பு வாழ்க்கையை அறியச் செய்கிறது’’.

நாம் அனைவரும் வாழ்க்கை வாழ்வதற்கான சக்தி இருக்கிறது. நாம் அனைவரும் பெரும் சாதனைகள் புரிய; மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கை வாழ ஆழ்மனத்தில் மறைந்து கிடைக்கும் உயர்ந்த சக்தியை இயல்பான சேவையினால் இன்னும் ஆழமாக சென்று உங்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையில் உள்ளது. உங்கள் வாழ்க்கைக் கட்டத்தினை கடந்து செல்வதற்கான ஒரு தூண்டுகோலாக அமையும். மேலும் `புரிதலுக்கான உருமாற்றம்என்று நாம் அமைக்கின்ற இயல்பு வாழ்க்கை அனுபவத்தைப் பெற உதவியாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் முழுமை காண விரும்பும் உங்களைப் பற்றிய உண்மையை அறிய முடியும்.

இயல்பான வாழ்க்கையில் இயல்பான சேவை வழியாக தனக்கே இயல்பாக உள்ள ஆற்றலை கண்டறிய முடிகிறது. அதற்கே உரிய இயல்பான சிந்தனைத் திறனால் சிந்திக்கக் கூடிய திறனைச் சுதந்திரமாக வளர்க்கத் தொடங்கி விடுகிறது. ஒருவர் தன்னுடைய இயல்பான தனித்தன்மையை உணர வேண்டுமானால் இயல்பான சேவை தவிர வேறு எளிய வழி எதுவும் இல்லை. தன்னியல்புத் தன்மையை வழிநடத்திச் செல்ல வேறு வழியும் இல்லை. இயல்புடன் வாழ்வதற்குப் பொருத்தமான வேறு எளிய வழி எதுவும் இல்லை.

இந்த நடைமுறை நாம் எல்லோருமே எதிர்கொள்ள வேண்டிட மிகப்பெரிய சவாலைப் பற்றிய ஒரு கருத்தை நமக்குத் தருகிறது. படிப்படியாக நம்மை வடிவமைக்கும் வருடங்களால், கலவாங்களும், குழப்பங்களும் நிறைந்த இந்த உலகத்தின் நியாயங்களை நாம் ஏற்றுக் கொண்டு, நம்முடைய உண்மையான தனித்தன்மையிலிருந்து விலக்கப்பட்டு விடுகிறோம். வறுமை, வன்முறை, தோல்வி போன்றவற்றிற்க்கு இரையாகி விடுகிறோம். வாழ்க்கையின் தன்மைகள் நம்மைத் தாக்குதலுக்கு உள்ளாக்கி விடுகின்றன. அவற்றின் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிவதில்லை. நம்முடைய பிற்கால வாழ்க்கையில் மீண்டும் மறைவிடத்திலிருந்து வெளிப்படுகின்றன. நாம் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, நம்மில் பெரும்பாலானவர்கள் நம்மைச் சுற்றிலும் உள்ள பலவற்றினாலும் பாதிக்கப்படுகிறோம் என்கின்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்தது என்ற சந்தேகமே இல்லாமல் இருந்து விடுவோம். நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தச் சீரழிவைச் சரிப்படுத்திக் கொள்ளாமலேயே மீதியுள்ள வாழ்க்கையை வாழ்கிறோம்.

பெருமளவுக்கு நாம் நம்முடைய அறிவுத்திறனை நம்முடைய உணர்வு நிலை மட்டத்திற்குக் கீழேயே இயங்கும்படி செய்கிறோம். இந்த இயல்பான சேவையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஒப்பற்ற ஆற்றலை, நீங்கள் இன்னும் ஆழமாகச் சென்று உங்களைக் கண்டு பிடிப்பதற்கு உதவும் வகையில் உள்ளது. உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அந்த உன்னதமான ஆற்றலை நீங்கள் சேவையில் கண்டுகொண்டு உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டீர்களானால் உங்களுடைய உன்னதமான வாழ்க்கையை எளிதில் அறிய முடியும்.

இயல்பான சேவையின் நோக்கங்களை நீங்கள் உங்களுடைய இயல்பில் உங்களுடைய வாழ்க்கைக்கு உள்ளிருந்தே நிறைவேற்றிக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். இதில் நீங்களே உங்களை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். இதனால் உங்கள் மனக்குழப்பங்களிலிருந்தும், சுய சந்தேகங்களிலிருந்தும், தொடர்ச்சியான தோல்விகளிலிருந்தும் காப்பாற்றி, நீங்களே உங்களுடைய இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஆற்றலை உங்களுக்குள்ளிருந்தே வெளிப்படச் செய்வதுதான் அந்த நம்பிக்கை.

சிந்திப்பதற்கு இந்த மண்ணில் வாழும் எல்லா உயிரினங்களிலிருந்தும் நம்மைப் பார்க்கக் கூடிய திறமை நமக்குச் சிந்தனை தருகிறது. இயல்பான உணர்வுகளின் அடிப்படையில் வாழ்வதைக் காட்டிலும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நாம் வாழ்கிறோம். இயல்பான சேவையின் வாயிலாக சுதந்திரமாக கற்றுக் கொள்ளவும், வளரவும், சோதிக்கவும் நம்மால் முடிகிறது. இதனால் தேவையுள்ளவைக்காகச் சிந்திக்கக் கூடிய வகையில் நம்முடைய சிந்தனை போக்கு அமையும். அதற்கே உரிய இயல்பான சிந்தனைத் திறனால் சிந்திக்கக் கூடிய திறனைச் சுதந்திரமாக வளரத் தொடங்கி விடுகிறது.

யாரெல்லாம் இயல்பான சேவை செய்கிறார்களோ அவர்களெல்லாம் நம்மைப் படைத்தவருக்குச் சேவை செய்கிறார்கள்-தங்களுடைய முயற்சிகளினால், நிறைவுறும் செயல்களினால், பூமியில் கடவுளின் பணி நிறைவு பெறுகிறது. அதற்கான பரிசுகள் ஏராளமானவை சிலர் அதைச் தேவையானதென்றும் வேறுபாட்டை உண்டாக்குகிறதென்றும் உணர்வு ரீதியான அந்த பங்களிப்புக்கு கிடைக்கும் நிறைவை தெரிந்திருக்கிறார்கள். இந்த நிறைவுகளெல்லாம் வலிமையில்லாத வையாக இருந்த போதும், மிகப்பெரிய அளவில் அர்த்தமுள்ள தாகவும், வாழக்கூடியதாகவும் இருக்கிறது. மனநிறைவு, மன மகிழ்ச்சி, பெருமிதம் போன்ற அந்த உணர்ச்சிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும்-நேசித்தோம், இயல்பான சேவை செய்தோம்.

உண்மையில் நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றிய நம்முடைய உண்மையான தன்னியல்வு நிலைமையை நம்முடைய பங்களிப்பின் வாயிலாக அறிவோம். இதுதான் இயல்பான சேவை குறித்து உள்ள கோட்பாடு. இயல்பான சேவை எளிமையான தாகவும், ஆழமானதாகவும் உள்ள ஒரு கருத்தாக்கம் கனவு மனம் எப்போதும் தன்னையே வெளிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடியது முழுமையான உண்மையை அது உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது இயல்புணர்வு மனத்தினால் இயல்பான சேவை அளிக்கப்படுகிறது. அவை பௌதிகத் தன்மையுள்ள வடிவங்களாக உருமாறுகின்றன. பிறருக்கு வழங்குவதன் மூலமாகவும், அர்ப்பணிப்பதன் மூலமாகவும் பங்களிப்புக்கள் நிகழ்கின்றன. இந்த இயல்பான சேவைகளெல்லாம் இயல்பான வாழ்க்கைக்கு வழிக் காட்டுகின்றன.

இயல்பான சேவையின் உண்மை எவ்வளவு உயர்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்! கடைசியாக நீங்கள் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். பெருந்தன்மையும், தன்மதிப்பும் நிறைந்த உங்கள் இயல்பு வாழ்க்கையை மகுடமாக அணிந்து கொள்ளக்கூடிய திறனைப் பெறுங்கள் இயல்பான சேவையில் நிறைவோடு இருங்கள்! அதை நீங்கள் உங்களுக்குக் கொடுங்கள், எனக்கு கொடுங்கள் உங்களுடைய உன்னதமான தன்மையை விரிவான இந்த உலகம் பங்கீட்டுக் கொள்ளட்டும். இது எப்படிப்பட்ட ஒரு சவாலாக, எப்படிப்பட்ட ஓர் உன்னதமான சந்தர்ப்பமாக இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடியுமானால் இயல்பான சேவையால் உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி எப்பொழுதுமே பாவப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த முறையில் தான் இயல்பு வாழ்க்கை அமையும்.

``இயல்பான சேவையை இன்றியமையாத அங்கமாக்குங்கள். இதைத் தொடர்ந்து இயல்பு வாழ்வு உங்களுக்கு வாழ்க்கை முறையாகும்’’.

9. கர்மயோக நிலையில் இயல்பான சேவை


9. கர்மயோக நிலையில் இயல்பான சேவை

``இந்த பிறவியில் கர்மயோக நிலையில் இயல்பான சேவையில் ஒவ்வொரு நற்செயலும் பேரின்ப பெருவாழ்வுக்கு வித்தாகிறது’’.

செய்யும் செயலை சிறப்பாக செய்வதே கர்மயோகம். தன்னை அறிந்து செய்யும் செயலை சிறப்பாகச் செய்வதே கர்மயோக சேவையாகும். இந்தக் கர்மயோக நிலையில் இயல்பான சேவைப் பாதையைப் பின்பற்றும் பொழுது இதயத்திற்கு உண்மையாக இருங்கள் அப்போது பேர் உண்மை விளங்கும்.

மனிதன் தன் அனைத்துச் செயல்களையும் தன் உணர்வுகளை மகிழ்விக்கவே செய்கிறான். நானே இதைச் செய்கிறேன்; இவை எனக்குச் சொந்தம்; இந்த எண்ணங்களை மாற்றுங்கள். இவை அனைத்திற்கும் பரம்பொருளே காரணகர்த்தா. அவர் சக்தியாலேயே நடைபெறுகின்றது. நான் வெறும் கருவி மட்டுமே என்று நீங்கள் உங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதே கர்மயோகம். இந்தக் கர்மயோகத்தின் ரகசியம் ஒவ்வொரு செயலையும் ஆர்வத்தோடும், தன்னலமற்றும் இயல்பான சேவை செய்வதுதான். இந்தக் கர்மயோகத்தில் நாம் செய்யும் வேலையை நிறைவாக ஆற்றி இயல்பான சேவை செய்து வாழ்வதே சிறந்த கலையாகும்.

நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கர்மயோக நிலையில், அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இந்த நிலையில் இயல்பான சேவையில் இணைந்து செயல்படும் போது அகங்காரம் சிறிது சிறிதாக நீங்குகிறது. செயல்கள் அனைத்தும் நிறைவானவையாக அமைகின்றன. இதன் இனிமையைச் சுவைத்த பின்னர் இவ்வுலகமே தெய்வீகத் தன்மையின் ஒரு வெளிப்பாடுதான் என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். தான் பரம்பொருளை ஒன்றியவன். அவன் லீலையில் பங்கெடுப்பவனே என்று எண்ணுகிறார். அவன் அவனுக்காகவே அவனுள்ளேயே வாழ்கிறான். இப்போது அவனது எண்ணங்களும் செயல்களும் இறைவனுடையவையே.

கர்மத்தை ஒரு யோகமாகச் செய்யும்போது அது இன்பத்திற்கான காரணமாக அமைகிறது. கர்மலோக நிலையில் சேவை செய்யும்போது அது பேரின்பத்திற்கு காரணமாக அமைகிறது. கர்மயோக நிலையில் இயல்பான சேவையை தன்னலமற்ற செயல்களால் செய்யும் போது பூரண அமைதி கிடைக்கிறது.

பல வருடங்களாக இடர்ப்பாடுகளுக்கிடையில் கடுமையாக உழைத்து இயல்பான சேவையுடன் வாழ்ந்த ஓர் உண்மையான கர்மயோகியை நீங்கள் கண்டால் அவரின் தூய்மை, தன்னலமற்ற நிலை, உள்ளானந்தம், சாதாரண அமைதி மற்றும் ஆன்மீக வாழ்வில் அவரடைந்துள்ள முன்னேற்றத்தை நன்கு உணரமுடியும். நீங்கள் உங்கள் உடலாலும் மனதாலும் கூட கர்மயோகத்தை செய்யலாம். இதனுடன் தினமும் இயல்பான சேவை செய்யுங்கள். இதை உங்கள் வாழ்வின் இறுதிவரை செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக இருக்கமுடியும்.

இயல்பான சேவையில் சீரான பயிற்சியால் நீங்கள்சிறந்த கர்மயோகியாக மாறுவீர்கள். இதனால் தன்னலமற்ற இயல்பான சேவையைச் செய்து எல்லா செயல்களும் உச்ச வளர்ச்சியடைந்து ஞானத்தில் இணையும். இந்த கர்மயோகத்தில் இயல்பான சேவை செய்யும் வாய்ப்பையும் நழுவவிடாதீர்கள். சிறந்த சேவைக்கான தளத்தில் இணைந்து செயல்படுங்கள். செயல்களைத் தள்ளிப்போடாதீர்கள். உற்சாகத்தோடும், மனமுவந்தும் சேவை செய்யுங்கள். உண்மையான அன்போடும், மரியாதையோடும், இரக்கத்துடனும் இயல்பான சேவை செய்யுங்கள். சேவை செய்யும் வாய்ப்பைத் தந்ததற்காக நீங்கள் நன்றியோடு இருங்கள். இதனால் தெய்வீக ஆற்றல் தானே வரும். பிறருக்காக எவ்வளவு செலவிடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக அந்த தெய்வீக சக்தி உங்களுள் பாயும்
.
கர்மயோக நிலை சேவை என்பது தவறானவற்றை எதிர்க்கவும், நல்லவற்றை மேம்பாடு அடையச் செய்யவும், நற்குணங்களை வளர்க்கவும், பழைய கர்ம விளைவுகளில் இருந்து விடுபடுவதற்கும் புதிய நற்செயல்களைச் செய்ய வழிவகை செய்கிறது. ஒருவர் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்ளவும், தேவையற்ற பதிவுகளையும், ஆசைகளையும் அகற்றச் செய்கிறது. அதனைப் பழகியவர்களுக்கு அது எளிதாகவும், இனிமையாகவும் ஆகிவிடும். முடிந்தவரை எதையும் எதிர்பாராமல் பணி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் மனத்தை விரிவுபடுத்திக் கொண்டு இவ்வுலகமே நீங்கள் தான் என்று எண்ண வேண்டும். இதனால் ஆழ்ந்த உள்வலிமை தோன்றும். உங்கள் மனத்தில் உண்மையான அன்பு, பரிவு, இரக்கம் ஆகியவை நிரம்பித் ததும்பும். இதனைத் தன்னலமற்ற செயல்களாகச் செய்வீர்களானால் அந்தளவுக்குத் தெய்வீக ஆனந்தம் உங்களுள் பாயும். எவன் தன் சுகத்தையும், சந்தோஷத்தையும் பிறருக்கு உதவுவதற்காகச் செய்கின்றானோ அவனே சிறந்த ஆத்ம சாதகனாக மாறுகின்றான். இறுதியான பேரின்பத்தை அடைய வேண்டுமானால் நீங்கள் கர்மயோகியாக மாறி இயல்பான சேவை செய்ய வேண்டும். கர்மயோக நிலையில் செய்யும் இயல்பான சேவையில் செய்யும் செயல்கள் புனிதமானவையாக மாறி ஆனந்தத்தை கொடுக்கும். உலகத்தில் இருந்துகொண்டே உலக வாழ்க்கை மூலமாக முக்தியடைய வழி கூறுகிறது.

``கர்மயோக நிலையில் இயல்பான சேவையின் மூலம் அனுபவம் பெறும் போதுதான் பிறப்புக்கள் அறுக்கப்பட்டு இலக்கை விரைந்து அடையச் செய்கிறது’’.










8. இயல்பான சேவையில் தெளிவு


8. இயல்பான சேவையில் தெளிவு

``இயல்பான சேவையால் வெளிப் பொருட்களுடன் உள் இயல்பை அறிய செய்து தெளிவை ஏற்படுத்துகிறது.’’

நம்மால் முடிந்த அளவு சேவை செய்வது ஒன்றே வாழ்க்கையை வளமாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற எல்லா சிறப்புகளும் ஒரு நாள் தேய்ந்து மறைந்து போகும். (இயல்பான சேவையின் பலன் ஈறெழு ஜென்மமும் வரும்) இது வளமான சமுதாயத்திற்கும், முழுமையான வாழ்விற்கும் ஒரு திறவுகோலாக அமையும்.

இயல்பான சேவையில் அன்புதான் அடிப்படையான ஆதாரம். தன்னலம் கருதாது செய்யும் இது மிகச் சிறந்தது. சுய நல நோக்கமில்லாமல் செய்கிற இயல்பான சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையாகும். எங்கும் நிறைந்துள்ள இறைவனின் படைப்புகள் என நினைந்து இயல்பான சேவை செய்கின்றோம். அப்போது வழக்கமான - அன்றாட - தினசரி வேலையைச் செய்வதில் வெளிப்படையாக ஈடுபட்டிருந்தாலும், உண்மையில் நாம் இயல்பான சேவை என்னும் மார்க்க்ததையே பின்பற்றுபவர்களாக இருப்போம். பொது வாழ்க்கையில் நாம் இருக்கும் இடத்தை இறைவன் குடியிருக்கும் இடமாகக் கருதி நாம் இதை செய்வதால் நாம் பார்ப்பதெல்லாம் இறைவன் படைப்பாகத் தெரிகின்றது. நமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்றும் நாம் கடமையுணர்ச்சியுடன் அவர்களைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் கருதி நடப்போமென்றால் நாம் கடவுளின் குழந்தைகளுக்கே சேவை செய்கிறோம். அதன்மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்கிறோம். இதனால் நமக்கு அவர்கள்மேல் உள்ள அளவுக்கு மீறிய பற்றை (பாசத்தை) நீக்கிவிட்டு அதன்மூலம் நம் பாதையில் இருந்து மிகப்பெரிய தடைகளையும் விலக்கி விடுகிறோம். இது நாம் சுயநலம் இல்லாமலும் சொந்தப் பற்றுதல் இல்லாமலும் தெய்வீகக் கட்டளையாகச் செய்வதாகவே தோன்றும். இதனால் அகிலம் முழுவதும் அளாவிய அன்பு ஓங்கி வளர்கிறது. நாம் கடவுளின் ஒவ்வொரு படைப்பையும் அவற்றின் மேல் பாசமும் பற்றுமில்லாமல் நேசிக்கத் தொடங்குகிறோம்.
நீ ஒருவருக்கு இயல்பான சேவை செய்வதால் உனக்கு நீயே சேவை செய்ய முடிந்ததை நினைத்து அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. சேவை செய்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல.

உலகில் வாழும் மனிதன் பற்றுதல்களாலும் பொறுப்புகளாலும் ஏற்பட்ட அனேகக் கவலைகளாலும், விகாரங்களாலும் சூழப்பட்டிருக்கும்போது சேவை செய்வது முடியாத காரியம் என்று சிலர் நினைக்கிறார்கள். கடவுளுக்கு நாம் செய்யும் இயல்பான சேவை என உண்மையான முறையில் திருப்பினால் அது மிகவும் எளிதான செயல் என்று அவர்களுடைய சொந்த அனுபவமே அவர்களுக்கு நிரூபித்துவிடும். எல்லாத் தொந்தரவுகளும், வேலைகளும் இருந்தபோதிலும் எல்லோராலும் இவ் வழிமுறையைப் பின்பற்றி நடக்க முடியுமென்றும் அவர்களுக்கு விளங்கும்.

நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான வழி, இயல்பான சேவை செய்து மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை எல்லா இதயங்களிலும் வெளிப்படுத்தும்படிச் செய்ய வேண்டும். இயல்பான சேவை செய்வதன் மூலமாகத்தான் எல்லா நன்மைகளையும் பெற்றுச் சேவையில் தெளிவு பெறமுடியும். பரிபூரணமான தியாக உள்ளத்துடன் இயல்பான சேவையில் ஈடுபடு, சேவையில் வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ள மனம், உறுதியுடன் தானாகவே இணைந்து விடாமுயற்சி செய்து இயல்பான சேவையின் தெளிவை உணர்ந்து கொள்ளும். இதனால் எதை செய்தாலும் நிறையுணர்வோடு செய்வது இயல்பாகி விடுகிறது. இதனால் நாம் ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குச் சேவை செய்து நிறைவு காண்போம். இதனால் பூமியின் மாறுதல்கள் மேலும் பாதிக்கப்படுவதில்லை. அவன் கருணையையும், அன்பையும் அறிகிறான். இதனால் அமைதி நிலவுகின்றது. அவன் மேலும் உயரிய இயல்பான சேவையால் உயர்கின்றான். மிக உயர்ந்த இயல்பான சேவையில் வாழ்க்கையைப் புனிதமாக்குகின்றான். இது எரிச்சலை நீக்கி, நிம்மதியைக் கொடுக்கின்றது. சாந்தப்படுத்தி, புதுப்பித்துப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் உள்ளானந்தத்தில் பிரவேசிக்கும். அகங்காரம், காமம்,  போராசை போன்ற இகப்புத்திகள சிறிது சிறிதாக நீங்கித் துக்கங்கள், மனக்குழப்பங்கள் குறைந்து பண்பு நிறைந்தவனாக, அன்பு நிறைந்தவனாக, விழிப்புணர்வு மிக்கவனாக, உள்ளானந்தம் உடையவனாக மாறிப் பரிபூரணமானவனாகத் திகழ்கிறான்.

இயல்பான சேவையை நேசியுங்கள்; இதுவே நிரந்தரமான சத்தியம். இங்குதான் எல்லா முரண்பாடுகளுக்கும் தீர்வு காணப்படுகின்றது. இங்கு எவனொருவன் சென்று செயலாற்றுகின்றானோ அதுவே சிறந்தது. இதனால் அவன் குடும்பத்திற்கும் தனக்கும் செய்ய வேண்டிய கடமையை நிறைவு செய்கின்றான். அவன் செய்யும் தொழிலில் சிறந்து, கிடைக்கும் நேரத்தில் இயல்பான சேவை செய்து பரம்பொருளுக்குச் செய்யும் சேவையாக நினைத்துத் திருப்தியடைகின்றான்.

இயல்பான சேவையில் தெளிவு என்பது உன்னதமான இலக்கு. இதை வார்த்தையில் விவரிக்க இயலாது. இது ஒவ்வொருவரும் அனுபவித்து உணர வேண்டிய உண்மையாகும்.

இயல்பான சேவையில் வெளிப்படுத்தும் இயல்புணர்வு களால் அவனது சிந்தனையும் செயலும் அகதூய்மையடைந்து நம் இலக்கை விளக்குகின்றது.