Monday, September 5, 2011

5. வணிக இயல்பான சேவை



5. வணிக இயல்பான சேவை

``வணிக இயல்பான சேவையால் சமுதாயத்தை சமநிலை அடையச் செய்து அகமும் புறமும் பெரும் மாறுதலை அடைய செய்யும்’’.

ஒரே சீராக தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கையோடு, பிறருக்காகவும் செய்யும் செயல்களைத் துரிதப்படுத்தும் முறையே வணிக இயல்பான சேவையாகும்.

வணிகத்தையும் இயல்பான சேவையும் இணைவதே வணிக இயல்பான சேவையாகும். அதாவது வணிகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நாம் செய்யும் சேவை வணிக சேவை. வணிக மூலம் செய்யும் இயல்பான சேவை வணிக இயல்பான சேவை. இது ஒன்றே அனைவரின் வாழ்க்கையை வளமாக்கும். சரியான சிந்தனைகளும், திட்டங்களும் இல்லாத காரணத்தால் நாம் வணிகத்துடன் இயல்பான சேவை செய்வதன் உயர்வை அறிய முடியவில்லை.

சுதந்திரத்திற்கு முன் வணிகம் என்பது ஒரு தர்ம நெறிக்கு உட்பட்டு இருந்தது. இராஜாக்கள், ஆட்சி செய்யும் அதிகாரிகள் எல்லாம் தர்ம நெறிகளுக்குப் பயந்தார்கள்; கட்டுப்பாட்டுடன் நடந்தார்கள். அப்போது வணிகமும் கட்டுப்பாட்டுடன் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. வணிகம், கல்வி, மருத்துவம், ஆட்சி முறைகள் எல்லாம் புனிதமாகக் கருதப்பட்டன. காலமாற்றத்தாலும், அறிவு மாற்றத்தாலும், ஆட்சி மாற்றத்தாலும் இதன் புனிதத் தன்மை சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து முழுவதும் வியாபாரமாக மாறிவிட்டது. இவற்றைத் திரும்பவும் புனிதப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவற்றைப் பழையப்படி புனிதப் படுத்த நாம் அனைவரும் ஒன்றுகூடிச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இவற்றைப் புனிதப்படுத்தும் வழிகளில் வணிக இயல்பான சேவை ஒன்றாகின்றது. இந்த வழி மற்ற வழிகளைக் காட்டிலும் சிறந்த வழியாகின்றது. சுலபமான வழியாகின்றது. புனிதமான வழியாகின்றது.

இது ஒரு வரையறுக்கப்பட்ட இயல்பான சேவையுடன் கூடிய வணிகமாகும். இதன் செயல்திறன் காலத்திற்கு ஏற்றவாறு வரையறுக்கப்படுகின்றது. இது உயர்ந்த தரமுடையதாகவும் சிறந்த பயன்களை அளிக்கக் கூடியதாகவும் மற்றும் உயரிய தொழில் நுட்பமுடையதாகவும் இருக்கும் வகையில் அளிக்கின்ற இயல்பான சேவையில் கனிவும் பண்பும் வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவு தரக்கூடியதுமாக இருக்கும். பொருள்களின் விலைகளில் நியாயம் இருக்கும். வாங்கும் பொருள்கள் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய மதிப்பு உடையதாக இருக்கும். வணிக இயல்பான சேவையின் புது அர்த்தங்களையும் ஊக்கமுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும் கற்பிக்க வேண்டும். முடிந்த அளவு வணிக இயல்பான சேவை செய்வது என்பது ஆளுமைத் தன்மையின் உயரிய உயர்ந்த வெளிப்பாடாகும். இதனால் வாடிக்கையாளர்கள் நிறைவையும், தெய்வீக மகிழ்ச்சியையும் பெறுகின்றனர்.

கூட்டு இயல்பான சேவையின் புனிதத்தைக் கூட்டு வணிகத்தில் உணர முடியும். மக்கள் அனைவரையும் ஆன்மீகச் சமுதாயச் சூழலுக்குள் கொண்டு வந்து, அவர்களிடம் நிறைந்துள்ள ஆற்றலை வெளிப்படுத்திச் சமுதாயத்திற்குக் கூட்டு இயல்பான சேவை செய்வதன் மூலம் உலகில் ஆரோக்கியமான தெய்வீகச் சூழலை உருவாக்கலாம். இதனால் ஆன்மீகப் பயிற்சி, விழிப்புணர்ச்சி, அறிவு, பரிவுணர்ச்சி, செயலில் நேர்மை ஆகியவற்றை உருவாக்க முடியும். இதன்மூலம் உயரிய பண்பாட்டுக்குத் தலைவணங்கிச் சமுதாயம் தொடர்பான பணிகளில் ஈடுபடுகின்ற விழிப்புணர்வினை உண்டாக்க முடியும்.

வணிக இயல்பான சேவையில் மட்டுமே மக்களுக்கு முழுமையான சேவையினை எளிதில் செய்திட முடியும். மக்களுக்கு உணவு அளிப்பது, மருந்து அளிப்பது, கல்வி கற்பிப்பது, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றை ஏற்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தி எல்லோரும் ஒன்றுகூடி நிறைவாக வாழ வழிவகை செய்கிறது. கூட்டு வாணிகத்தின் பன்முகச் சேவை காலத்தின் கட்டாயம். எனவே வணிக இயல்பான சேவையைச் சிறப்பாகச் செய்ய நாம் அனைவரும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வணிக இயல்பான சேவையில் மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தி, சீரிய சமுதாயத்தை அமையச் செய்கிறது.


No comments:

Post a Comment