Monday, September 5, 2011

6. இயல்பான சேவை செய்யும் கலை


6. இயல்பான சேவை செய்யும் கலை

``இயல்பான சேவையை ஒரு கலையாக கற்பிக்கும் போது நம் அனைவராலும் இயல்பாக உருவாக்கப்பட்ட சிக்கலான இந்த உலகில் வாழ்வது எளிதாகிறது.

இயல்பான சேவை செய்து வாழ்வதே ஒரு சிறந்த கலையாகும். எல்லோருக்கும் முடிந்த அளவு சேவை செய்து நம்மைச் சுற்றிலும் வளத்தைப் பெருக்கிக் கொள்வதைவிடச் சிறந்த நுண்கலைவேறு எதுவுமே உலகில் இல்லை.

இந்த வளர்ந்த சமுதாயத்தில் சேவை பற்றிய கருத்துக்கள் தெரிந்தும்கூட, சரியான நடைமுறை வழி நடத்தப்பட இயலாத காரணத்தால் இதன் புனிதத்தைத் தொடர்ந்து அறியும் வாய்ப்புக் கிட்டுவதில்லை. எனவே வணிக இயல்பான சேவையை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்திச் செயல்படும்போது, எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது; அன்பை வெளிப்படுத்துகின்றது. பகுத்தறிவை உண்டு பண்ணுகின்றது. இகப் புத்தியினைக் குறைக்கின்றது. வேற்றுமைகளைக் களைகின்றது. ஏற்றத் தாழ்வுகளை குறைக்கின்றது. அனைவருக்கும் நிறைவு நிலையை உண்டு பண்ணுகின்றது.

இயல்பான சேவையில் உள்ள உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறவில்லை. போதிய அளவு விளக்கப்படவில்லை. போதிய அளவு அறியப்படவில்லை. நாம் அறிந்த அன்னதானம், பிச்சைக் காரர்களுக்கு உதவுவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளையே சேவை என்று எண்ணுகிறோம். அது சேவையின் முழுப் பலனையும் கொடுக்கவில்லை. எனவே இதைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமானால் அதை ஒரு கலையாகவே நாம் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் இதன் புனிதத்தை அறிய முடியும்.

இயல்பான சேவையை அனுபவித்து உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த நிலையாகும். இந்த உயர்ந்த நிலைக்கு அனைவரையும் அழைத்துச் செல்லும் முறைதான் இயல்பான சேவை செய்யும் கலையாகும்.

இயல்பான சேவை செய்யுங்கள் அதோடு நல்லவனாக இருங்கள்.

இதுதான் சிறந்த கலையாகும். இந்த வாக்கியம் சாதாரணமாக இருந்தாலும் இதைத் தொடர்ந்து செய்தால் அநேக இரகசியங்களை எளிதில் அறிய முடியும். இதை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும்போது படிப்படியாக உண்மை களை அறியச் செய்து இறுதியில் உங்களை முதிர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.

இயல்பான சேவை செய்யும் கலையில் நிறையப் பயன்கள் உள்ளன எனத் தெரிந்து வைத்துள்ளோம். இயல்பான சேவை செய்யும் கலையை முறையாக வரையறை செய்து, முறையாகச் செயல்படுத்த வேண்டும். இயல்பான சேவை செய்யும் கலை நம்முடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்களில் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நாம் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக் கின்றோம்.

இயல்பான சேவையின் நுண்கலை என்பது அனைத்தையும் இறைவனின் படைப்பாகக் கருதுவதும், அன்பு செலுத்தும் மனோசக்தியை நாம் பெற்றிருப்பதும் இதன் சிறப்பாகும். அதனை நம் உள்ளங்களில் வளர்த்துப் பெருக்கிச் செழிப்பாக்க வேண்டும். இதனால் மட்டுமே உண்மையான விடுதலையைப் பெறமுடியும்.

இம்முறையில் ஆக்கப்பூர்மான ஆற்றலை விழிப்படையச் செய்து விரிவடைந்து பெருகிப் பரவச் செய்கின்றது. இந்த உயிர்த் துடிப்பான உள்முக ஆற்றலைத் தூண்டிப் பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. இயல்பான சேவையின் தொடக்கம், அளவற்ற வளர்ச்சியின் அனுபவம் அன்பின் முதிர்ச்சிக்கு நம்மை அழைத்துச் சென்று நமது வாழ்க்கையை முழுமையுறச் செய்கின்றது.

இதனை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொண்டு மன நிறைவுடன் அன்றாடம் செயல்பட வேண்டியது அவசியம். நம் கர்ம வினையைக் குறைக்க இயல்பான சேவை செய்கிறேன் என்ற உயரிய கொள்கையை மேற்கொண்டால் சீரிய வாழ்க்கை முறை உருவாகும். சேவை செய்யும் கலையால் பணியிலேயே நிறைவைக் காண முடியும்.

இயல்பான சேவையை அனுபவித்து தன்னை உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த கலையாகும்.

No comments:

Post a Comment